SOURCE: http://www.allpoetry.com
SITE: TomNJerry
TAMIL TRANSLATION: Rutharas
A FEARLESS LION HEARTED WARRIOR – VEER ABHIMANYU
வீரத்திருமகன் அபிமன்யு
Broken words, haunted memories depicting a dark tale
A never ending pain of an abandoned child amidst a nightmare
His youth trapped in a twisted web
His fate engulfed into flames of treacheries
திக்கி தினரும் வார்த்தைகள், அச்சுறுத்தும் நினைவுகள் கூறும் ஒரு கருப்பு சரித்திரம்
முடிவில்லா வலியோடு முடிவை தேடி முடித்து வைக்க போராடும் ஒரு இளம் வீரன்
சக்கரவியூகத்தால் சூழப்பட்டாலும் அன்று அவனை விழுங்கியது சுழ்ச்சியின் வலைதானே தவிர வேறு ஏதும் இல்லை
He was slain unfairly and weaponless
Yet he roared like a fearless lion hearted warrior
His skin bled from every inch of his being
Yet his eyes were filled with fearless valour
நிராயுதபானியாக நின்ற வீரனை ஆயுதம் ஏந்திய கோளைகள் ஒன்றுகூடி சரமாரியாக தாக்கினர். இருப்பினும் ஓநாய்களின் வட்டத்திற்குள் சினம் கொண்ட சிங்கமாய் கர்ஜித்தான் மாவீரன் அபிமன்யு. சதை பிளந்து குறுதி பெருக்கடுத்த நிலையிலும் அம்மாவீரனின் கண்கள் இரண்டிலும் வீரமே ஓங்கியிருந்தது.
He fell biting into the dust, his knees hitting hard on the ground
His hands clasping the earth’s surface
Refusing to give up rising each time cutting open his opponents
Roaring louder with every breath he took
அவன் உடல் நிலத்திலிருந்து எழும் தூசியால் மூடப்பட்டிருந்தது. முட்டிகள் இரண்டும் தரையை கடினமாக அழுத்தின. கைகள் இரண்டும் நிலத்தில் படிந்திருந்தது. ஆனல் மனமோ எதிரிகளின் வீழ்ச்சியை எண்ணியிருக்க விடாமுயற்சி கொண்ட உடல் வெகுண்டெழுந்தது. வீற்றெழுந்த வீரன் எதிரில் வீற்றிருந்த கயவர்களை சிதைத்தெரிந்தான். தான் விடும் ஒவ்வொரு முச்சுக்கும் ஒவ்வொரு வீர கர்ஜனை அவனிடமிருந்து எழுந்தது. அதை கேட்ட களம் அதிர்ந்தது.
Shielding himself with a mere chariot wheel
He knew he was riding on the side of death
Unarmed he was brutally and merciless murdered
Murdered from behind multiple times by multiple people committing a sin
தன்னை நோக்கி மரணம் வந்தாலும் அந்த வீரனின் பார்வை எதிரிகளை நோக்கியே இருந்தது. அவன் வல்லவன்; அதனால் தான் உடைந்திருந்த தேரின் சக்கரமும் அவனுக்கு ஆயுதமானது. அபிமன்யுவின் வீர கதிர்களால் சாம்பலாகிகொண்டிருக்கும் படையை கண்ட கௌரவர்கள் எனும் கோளைகள் அந்த இளம் வீரனை அடக்க வழியறியாமல் ஒன்றாக சேர்ந்து பின் முதுகில் குத்தினர்.
After a last fierce roar … suddenly silence crept in
And finally the sun setting and sleeping on his horizon forever!
The sun gave up on him but the moon embraced him with open arms
He shines a twinkling star on the skies above
சினம் கொண்ட சிங்கத்தின் கர்ஜனைக்கு நிகரான அவனுடைய குரல் இறுதியாக ஒருமுறை கேட்டது. அதனை பின்தொடர்ந்து களம் எங்கும் மயான அமைதி நிலவியது. சூரியன் கண்களை மூடிக்கொண்டான். மாபெரும் வீரன் அபிமன்யுவின் உடல் மண்ணில் சரித்திருப்பதை காண இயலாது மலைகளுக்கு பின் மறைந்துகொண்டான். சந்திர குலம் தழைவிக்க பிறந்தவன் அந்த சந்திரனிடமே சென்று சேர்ந்தான். இன்றும், வானில் நட்சித்திரமாய் இருந்து தம் மக்களை பார்த்துக்கொண்டேயிருக்கிறான் அர்ஜுனன் சுபத்திரையின் புதல்வன்
வீர அபிமன்யு
Symbolizing courage, bravery and gallantry
For future generations to see
A generation who should draw an inspiration from …
A fearless lion hearted warrior Veer Abhimanyu who once lived!
அபிமன்யு உத்தமமான வீரன். வீழ்ந்தும் விதையாகக்கூடியவன். அன்று மரணித்தது அபிமன்யுவாக இருந்தாலும் வீழ்ந்தது கௌரவர்களே. மரணத்திலும் வெற்றியை நிலைநட்டியது அபிமன்யு என்ற இளம் நாயகனே! இவ்வுலகம் உள்ளவரை அர்ஜுனன் மைந்தன் வீர அபிமன்யுவின் நாமம் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.
வருங்கால இளைஞர்களுக்கு முன்னோடியாக சக்தியாக அர்ஜுனன் சுபத்திரையின் தவப்புதல்வன் வாழ்ந்துக்கொண்டேயிருப்பார்